****** WORSHIP THE CREATOR !!!! BUT NOT HIS CREATIONS ******

Monday, January 26, 2009

புரட்சி மார்க்கம் இஸ்லாம் பாகம்-1

"யுத்த நெடியும் ரத்தக் கறைகளும் படிந்த கள்ளிச் செடி மிகுந்த‌ பாலைவனங்களில்
இறைவன் பூச்செண்டு தூவிய‌ த‌ருண‌ம் அது.

ஆயிர‌க் க‌ண‌க்கான‌ மூட‌ந‌ம்பிக்கைக‌ள் விற்கப்பட்ட‌ மாட்டுச் ச‌ந்தையில் ம‌ரிக்கொழுந்து
வீசிய‌ கால‌ம் அது.

பெண்க‌ள் வெறும் இனவிருத்தி சாத‌ன‌ங்க‌ளாக மட்டுமே ப‌ய‌ன்ப‌டுத்த‌ப் ப‌ட்ட, ப‌டிப்ப‌றிவ‌ற்ற மூட‌ர்க‌ளைக் கொண்ட‌ இருண்ட‌ அர‌ப‌க‌த்தில், ஒளிவெள்ள‌ம் தோன்றிய‌ கால‌ம் அது.

பிறந்த‌ பெண்சிசுக்க‌ளையெல்லாம் உயிரோடு ம‌ண்ணில் புதைத்த‌ முட்டாள் ச‌மூக‌த்தை
சீர்ப‌டுத்த ச‌த்தியஜீவன் உதித்த காலம் அது.

எங்கிருந்தோ எடுத்து வ‌ர‌ப்ப‌ட்ட முந்நூறு சிலைக‌ளை வ‌ண‌ங்கி, பிற்போக்கு சிந்த‌னையின் உச்சாணியில் அம‌ர்ந்திருந்த‌ காட்ட‌ர‌பிக‌ளின் வாழ்வை, ஓரிறை ஒர் குடையின் கீழ் நெறிப்ப‌டுத்த,உத்த‌ம ம‌னித‌ம் உதித்த‌ கால‌ம் அது.

ஒட்டுமொத்த அழுக்கையும் க‌ழுவித் துடைக்க, இறைவ‌ன் இப்பூவுல‌குக்கு அனுப்பிய‌ இறுதித் தூத‌ர் முஹ‌ம்ம‌து ந‌பி (ஸல்) அவ‌ர்க‌ள்,ஒரு புர‌ட்சி மார்க்க‌த்தை, இறைவ‌ன் த‌ம‌க்க‌ளித்த‌ வ‌ஹி எனப்ப‌டும் இறைச்செய்தியை, அன்றைய‌ அர‌ப‌க‌த்தில் எத்தி வைக்க‌ ஆர‌ம்பித்த‌ கால‌ம் அது."



இஸ்லாம் என்ற‌ ஒரு அமைதியின் மார்க்க‌த்தை, அந்த புரட்சி மார்க்கத்தை அதைத் த‌வ‌றாக‌ பின்ப‌ற்றுப‌வ‌ர்க‌ளைப் பார்த்து தான் மாற்றும‌த‌ ச‌கோத‌ர‌ர்க‌ள் எடைபோடுகின்ற‌ன‌ர்.

அவ‌ர்க‌ள் இஸ்லாத்தை புரிந்து கொள்வ‌த‌ற்கு முன் சில‌ அடிப்ப‌டை விஷ‌ய‌ங்க‌ளில் த‌ங்க‌ளை தெளிவு ப‌டுத்தி கொள்ளுத‌ல் ந‌ல‌ம்.
அந்த புரிதலை கொணர்வதே இந்த தொடர்பதிவின் நோக்கம்.

ஒரு சிறு கேள்வி ப‌தில் ப‌குதியாக‌ இந்த‌ தொட‌ர்ப‌திவை ஆரம்பிக்கிறேன்.

************************************************
1.குர் ஆன் என்றால் என்ன ??

குர் ஆன் என்பது முழுக்க முழுக்க இறைவனது வசனங்களின் தொகுப்பு.
இது முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு, ஜிப்ரயீல் என்ற ஒரு வானவரின் மூலமாக
கொஞ்சம் கொஞ்சமாக 22 ஆண்டுகளாக அருளப்பெற்றது.

ஆகவே, குர் ஆன் என்ற ஒரு புனித நூல் முஹம்மது நபியோ அல்லது அவர்களின் மற்ற தோழர்களோ எழுதிய ஒன்றல்ல.

அது இறைவ‌னின் வாக்கு.


************************************************

2. ஹதீஸ் என்றால் என்ன ??

ஹதீஸ் என்பது முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாய்மொழிச் சொற்களின்
தொகுப்பு.இது ந‌பித் தோழ‌ர்க‌ளால், முற்றிலும் உண்மை என்று அதிகார‌ப் பூர்வமான‌
ஆதார‌ங்க‌ளுட‌ன் தொகுக்க‌ப் ப‌ட்ட‌து.அதனால் ந‌ம்ப‌க‌த் த‌ன்மையின்மை என்ற‌ பேச்சுக்கே இட‌மில்லை.


*************************************************

3.குர் ஆன் ஹதீஸ் இவ‌ற்றுள் முஸ்லிம்க‌ள் எதைப் பின்ப‌ற்ற‌ வேண்டும் ??

இர‌ண்டையுமே பின்ப‌ற்ற‌ வேண்டும்.

குர் ஆன் ஹதீஸ் இவை இர‌ண்டுமே முர‌ண்ப‌ட்ட‌ க‌ருத்துக‌ள‌ல்ல.
இறைவ‌ன் குர் ஆனில் என்ன அருளினானோ, அதையே தான் ந‌பிக‌ள்
வ‌ழிமொழிந்தார்க‌ள்.வாழ்ந்தும் காட்டினார்க‌ள்.


************************************************

இன்ஷா அல்லாஹ் !! கேள்வி பதில் தொடரும்.

(களைகள் பிடுங்கப்படும்...)



Saturday, January 24, 2009

நாம் வெறும் பெயர் தாங்கி முஸ்லிம்களா???-ஒரு சுய அலசல்......




நம் பெயர்கள் அரபு பெயர்களாகவும்,நாம் தொப்பி வைத்துக் கொள்வதாலும்,தாடி வைத்துக் கொள்வதாலும் அல்லது பர்தா அணிந்துக் கொள்வதாலும் நாம் முஸ்லிம்களாகி விடுவோமா????அப்படியென்றால் சுவர்க்கம் எளிதாக அடைந்து விடக் கூடிய இடமாகிடுமே........????அப்படியென்றால் நம் முன்னால் சென்ற நபிமார்களும் , நபிதோழர்களும் ஏன் தங்கள் வாழ்வின் சாதாரண நிகழ்வுகளைக் கூட இது சரியா தவறா என கவன‌மாக ஆராய்ந்து செய்தனர்????ஒருவேளை நாம் up to the mark இல்லையோ????அல்லது நாம் வெறும் பெயர் தாங்கி முஸ்லிம்களா????காலம் கடந்து விடுவதற்குள் நாம் இதனை தெளிவுப் படுத்திக் கொள்வோமே............



நமக்கான instruction manual-லான திருக்குர்ஆனில் நம்மை படைத்த இறைவன் நாம் எப்படி இருக்க வேண்டும் என்கிறான்.....நாம் எப்படி இருக்கிறோம் என திறந்த மனதுடன்,உண்மையாக,relax-ஆக நாம் ஒவ்வொருவரும் ஒரு சுய அலசலில் ஈடுபட வேண்டும்........................


"who believe in the unseen,are steadfast in prayer,and spend out of what we have provided for them;" (1:3)


முஸ்லிம்கள் தொழுகையைக் கடைப்பிடிப்பார்கள்,ஜகாதையும் முறையாகக் கொடுப்பார்கள் என இன்னும் பல இடங்களிலும் இறைவன் கூறுகிறான்........ஆனால்,நாம் எப்படி இருக்கிறோம்???

தொழுகையை முறையாக அதற்குறிய நேரத்தில் தொழுகிறோமா அல்லது cricket,serial,shopping,business என்று தள்ளிப் போடுகிறோமா??? ஜகாத் இன்றுவரைக்கும் என்னைப் பொறுத்தவரை என் அப்பா அம்மா department.....என் போன்றோர் முடிந்தவரை தங்கள் pocket moneyஇல் மற்றவர்களுக்கு உதவலாம் அல்லது தன் வசம் உள்ள உடைகள்,பொருட்கள்,அறிவு ஆகியவற்றாலும் உதவலாம்........ஜகாத் கொடுக்க முடிந்தவர்கள் முறையாகக் கணக்கிட்டுக் கொடுக்கிறீர்களா அல்லது குத்துமதிப்பா இரண்டாயிரத்து சொச்சம் என கொடுப்பீர்களா????



"guard strictly your (habit of) prayers,especially the middle prayer;and stand before God in a devout (frame of mind)" [2:238]



நடுத்தொழுகையை அஸர் தொழுகை என எடுத்துக் கொண்டால், நம்மில் பலருக்கு school,college,businessஆல் அதிகம் கட்டாவது லுஹரும் அஸரும் தான்.................


"and your Lord has decreed that you not worship except Him,and to your parents;good treatment.whether one or both of them reach old age (while) with you,say not to them (so much as ) "uff" and do not repel them but speak to them a noble word" [17:23]


நம் அம்மா அப்பாவிடம் நாம் எவ்வாறு நடந்துக் கொள்கிறோம்???வயதானவர்களை துரத்திவிடாமல் அன்புடன் நடத்துகிறோமா???"uff" என்றுக் கூட சொல்லக் கூடாதெனும் போது,நாம் பயங்கரமாக திட்டுகிறோமே அது????



"and tell my servants to say that which is best.........." [17:53]


உரிய அழகான வார்த்தைகளை மட்டும் தான் நாம் பேசுகிறோமா???நாம் பேசுவதில் எத்தனையோ அர்த்தமற்ற தேவையில்லாத வார்த்தைகள் இருக்கின்றனவே????



"and be moderate in your pace and lower your voice;indeed , the most disagreeble of sounds is the voice of the donkeys" [31:19]



எத்தனை அழகாக நம்மை நாசூக்காக நடந்துக் கொள்ள சொல்கிறான் நம்மை படைத்தவன்........




இவற்றையெல்லாம் சிந்தியுங்கள்.........உங்களை நீங்களே அலசுங்கள்.........தவறைத் திருத்திக் கொள்ளுங்கள்.........


மேலும் சில அடுத்த பதிவில்.............




Monday, January 19, 2009

ஒரு குழந்தையும் மூன்று தகப்பன்மார்களும்


முன் ஜாமீன்: இது ஒரு வரலாற்றுப் பதிவோ,இல்லை சேகரிக்கப் பட்ட செய்திகளின் தொகுப்போ அல்ல.என்னுடைய தனிப்பட்ட கோபத்தின் விளைவு தான் இந்த பதிவு.

கடந்த வாரம் வெள்ளியன்று ஜூம்ஆ சிறப்புத் தொழுகைக்கு முன் அடையாறு மஸ்ஜிது இமாம் சதீதுத்தீன் பாகவி அவர்கள் நிகழ்த்திய பேருரை பலபேரை வெகுவாக பாதித்திருக்கும்.காசாவில் பெண்களும் குழந்தைகளும் இஸ்ரேலிய வெறியாட்டத்தால் அனுபவித்து கொண்டிருக்கும் சொல்லொணா துயரங்களை அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போது அங்கே அமர்ந்திருந்த அனைவரது கண்களிலும் கண்ணீர்த் திரை மறைத்து கொண்டிருந்தது.எங்கள் செவிகள் மட்டுமே கேட்டு கொண்டிருந்தன.

*********************

ஒவ்வொரு போரும் பல படிப்பினைகளை நமக்கு ஏற்படுத்தி தருகிறது.ஆனால் இருபெரும் உலக யுத்தங்களின் முடிவில், யூதர்கள் கொஞ்சம் நிறையவே கற்றுக் கொண்டனர்.விளக்கெண்ணெய் சுவையையும் காண்சென்டிரேஷன் கேம்ப்களின் நினைவுகளையும் அவர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை.ஓ ஜெருசலேம் என்ற புத்தகத்தில் ஒரு யூதரல்லாத ஒரு அறிஞர் எழுதுகிறார்.ஹிட்லரின் கொடுங்கோல் ஆட்சியின் போது,அகதிகளாக கூட யூதர்களை ஏற்க மற்ற நாடுகள் மறுத்துவிட்டன‌. ஒவ்வொரு நாட்டின் கதவை தட்ட முற்படும்போதும் ஓடஓட விரட்டப்பட்டனர்.

1948க்கு முன் இஸ்ரேல் என்ற ஒரு நாடு உலக வரைபடத்திலேயே இல்லை.யூத நிலவங்கி என்ற ஒரு வங்கியை ஆரம்பித்து உலகிலுள்ள யூதர்களையெல்லாம் ஒன்று திரட்டி, பிரிட்டன் ஆதிக்கத்தில் இருந்த பாலஸ்தீன பகுதிகளை கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் வசம் கொண்டுவந்து,தமக்கென்று ஒரு தனிநாட்டையே உருவாக்கினர் என்று அவர்களின் ஒற்றுமையின் பராக்கிரமம் பற்றி எழுதிய வரலாறுகள் நாமறிந்ததே.

அப்போதிருந்த பாமர அரபிகளுக்கு யூதர்களின் இந்த சூட்சுமம் புரிந்திருக்க வாய்ப்பில்லை.இன்று சொந்த நாட்டில் இருக்க இடமின்றி அகதிகளாக திரிந்து கொண்டிருக்கின்றனர்.தொடர்ந்து 60 ஆண்டுகள் இந்த துப்பாக்கிச் சத்தம் கேட்டு அவர்கள் சலித்துப் போயிருக்கக் கூடும்.மேற்கு கரை,சிரியா,லெபனான்,ஜோர்டன் நாடுகளில் உள்ள மில்லியன் பாலஸ்தீனிய அகதிகளுக்கு இன்று வரை தங்கள் எதிர்காலம் எந்த நாட்டில் என்று தெரியாது.இதுமட்டுமின்றி மற்ற நாடுகளில் உள்ள பாலஸ்தீனியர்கள் கூட தன் சொந்த மண்ணில் கால் வைக்க முடியாத நிலைமை.

பிரிட்டன் வசமிருந்த பாலஸ்தீனிய மண்ணிலிருந்து, அந்த‌ இஸ்ரேலிய குழந்தை பிறக்க மெனக்கெட்டது அமெரிக்கா,பிரான்ஸ்,பிரிட்டன் என்ற 3 தந்தையர்கள் தான் என்று சொன்னால் அது மிகையாகாது.

அதனால் தான் என்னவோ,அந்த தந்தையர்களுக்கு நல்ல குழந்தையாக மட்டுமின்றி, வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரன் சொன்னது போல, அமெரிக்காவின் விசுவாசமிக்க ஏவல் நாயாகவும் இன்றளவும் இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது
மேலும் அவ‌ர் எழுதிய‌வ‌ற்றிலிருந்து,

"ஹமாஸ் இயக்கத்தினர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதன் பதிலடியாகவே இஸ்ரேல் தாக்கியுள்ளதாகவும், இது மிகவும் நியாயமான தாக்குதல்தான் எனவும் சாவு வியாபாரி, சர்வதேச பயங்கரவாதி ஜார்ஜ் புஷ் ஊளையிட்டுள்ளார்."

"வெள்ளை மாளிகையின் அரியணையின் யார்வந்து அமர்ந்தாலும், பிணம் தின்னி இஸ்ரேலை தன் செல்ல நாயாக வைத்திருப்பார்கள். இந்த ஏவல் நாய் பாலஸ்தீன மக்களின் குறிப்பாக இளம் தலைமுறையாம் பிஞ்சுக் குழந்தைகளின் குரல் வளைகளை கடித்து ரத்தம் குடிப்பதை கண்டு மகிழ்ந்திருப்பார்கள். அமெரிக்காவின் ஆதிக்கத்தில் ஐ.நா. சபையும் வெறும் அறிக்கைகளும், அறிவுரைகளும் மட்டுமே வெளியிட்டு தன் கடமையை முடித்துக்கொள்ளும்"


*******************************

மீண்டும் என்னுடைய கோபத்தை கீழே தொடருகிறேன்.

*ஒன்பதாயிரம் பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய‌ சிறைகளில் அடைக்கப் பட்டிருக்கின்றனர்.எல்லா ஜனநாயக நாடுகளிலும் இருப்பதை போன்றே மனித உரிமை கழகங்கள் இஸ்ரேலிலும் இருக்கத் தான் செய்கின்றன.ஆனால் அந்த சிறைகளில் என்ன நடக்கின்ற‌ன‌ என்பதே அந்த‌ ம‌னித‌ உரிமை க‌ழ‌க‌ங்க‌ளுக்கு தெரியாதாம்.

*குண்டுவீச்சில் காயமடைந்த மக்களுக்கு முதலுதவி செய்யக் கூட முடியாத நிலையில்,இஸ்ரேலிய‌ ராணுவ‌ம் ம‌ருத்துவ‌ம‌னைக‌ளையும் ஆம்புல‌ன்ஸ் ஊர்திக‌ளையும் தான் பிர‌தான் இலக்காக‌ கொண்டு தாக்கி வ‌ருகிற‌து.

*ஒரு நாட்டை அடியோடு ஒழிக்க‌ வேண்டுமென்றால்,அந்த‌ நாட்டின் ச‌ட்ட‌ம் ஒழுங்கை சீர்குலைத்தால் போதுமான‌து என்ப‌தை ந‌ன்கு அறிந்த‌ இஸ்ர‌வேல‌ர்க‌ள்,ஒரே வார‌த்தில் பால‌ஸ்தீன‌த்தின் 61 காவ‌ல்துறை உய‌ர் அதிகாரிக‌ளை கொன்று குவித்திருக்கின்ற‌ன‌ர்.

*நூற்றுக் கணக்கான பெண்களும் பச்சிளம் குழந்தைகளும் தான் இந்த கொடூர வல்லூறுகளின் முதல் இலக்கு.தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு மருந்தும் உணவும் எடுத்து வந்த லெபனான் நாட்டு கப்பலின் மீதும் ஏவுகணை தாக்குதல் நடத்தப் பட்டிருக்கிறது.

இதையெல்லாம் வேண்டுகோள்கள் மட்டுமே விடுத்து விட்டு வேடிக்கைப் பார்த்து கொண்டிருக்கும், அமெரிக்க கைப் பாவையான ஐ.நா வின் ஆண்மையற்ற தன்மையை என்னவென்று சொல்வது ? சிரியா,ஈரான் போன்ற சிறிய நாடுகளைத் தவிர, இந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பயங்கரவாத அடக்குமுறைகளை எதிர்த்து கேள்வி கேட்க திராணியில்லாத மற்ற அரேபிய‌ நாடுகள், கண்டனம் என்ற ஒற்றைச்சொல்லிலும்,பிரார்த்தனையின் பெயராலும் ஒருவித மெளனம் தான் காக்கின்றன.

உலக அமைதிக்கு ஊறுவிளைக்க கூடிய பயங்கர ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கும் ஒரு சர்வாதிகாரியைப் பிடிக்கிறேன் என்ற போர்வையில் ஒரு ஈராக் நாட்டையே நாசமாக்க வில்லையா ?? பின்லேடனையும் தாலிபனையும் வேரறுக்கிறேன் பேர்வழி என்று ஆப்கன் தேசத்தையே அழிக்க வில்லையா ?? இன்று இருபது லட்சம் பேர் இராக்கில் அனாதையாக்கப் பட்டிருக்கின்றனர்.இதில் விதவைகளும் குழந்தைகளுமே அதிகம்.ஆப்கன் நிலைமை இதை விட மோசம்.

"என் நாட்டில் அனாதையாக்கப் பட்ட குழ‌ந்தைக‌ளின் சார்பாக‌வும் வித‌வைக‌ளின் சார்பாக‌வும் உனக்கு நானளிக்கும் பரிசு" என்று கூவிக் கொண்டே தான் அந்த 'ஷீ'க்களை புஷ்ஷின் மீது எறிந்திருக்கிறார் முன்தாதர் அல்ஸ‌ய்தி.ஆனால் அந்த விலையுயர்ந்த ஷீக்களுக்கு அந்த முகம் தகுதியானதா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

உலகில் அமைதியை ஏற்படுத்துகிறேன் என கூக்குரலிடும் இந்த அமெரிக்க ஓநாய், ஏற்ப‌டுத்துவ‌து ஒருவித மயான அமைதியைத் தான்.எல்லா மக்களையும் கொன்று குவித்து, அடக்கம் செய்துவிட்டால் அங்கே அமைதி நிலவாமல் வேறு என்ன நிலவும் ??

பாதிக்கப்படுவது தமிழனாக இருந்தாலும் சரி..பாலஸ்தீனியனாக இருந்தாலும் சரி.யூதனாக இருந்தாலும் சரி..மத,இன,மொழி போன்ற மூக்கு கண்ணாடிகளை கழற்றி வைத்துவிட்டு பார்த்தாலும் இரத்தத்தின் நிறம் எப்போதும் சிவப்பு தான்.

***************************************************************
என்மனதைப் பிழிந்த புகைப்படங்கள் கீழே !!!!! !!!!!










Wednesday, January 14, 2009

இஸ்லாம் X தீவிரவாதம்

"நிச்சயமாக எவன் ஒருவன் ( கொலைக்கு பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தைத் தடுப்பதற்காகவோ அன்றி), மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான். மேலும் எவர் ஒருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைத்தவர் போலாவார்." 5:32
இது அல்குர் ஆன், ஸூரத்துல் மாயிதா வாயிலாக, இறைவன் கூறும் சத்திய வாக்கு.

இதில் உள்ள ஒரு சிறுபுள்ளியைக் கூட யாராலும் மாற்ற முடியாது.ஆனால் வெறும் ஒன்றரை லட்சம் பணத்துக்காக, இஸ்லாத்தையும் ஜிஹாத் ஐயும் மாற்றி எழுத நினைத்த தீவிரவாதிகள், தாங்கள் கொண்டு வந்த உலர்திராட்சைகளுக்கு தொட்டுக் கொள்ள தேனாக பயன்படுத்தியது இந்திய மக்களின் இரத்தத்தை....

கடந்த மாதம் ஹைதராபாத்தில் நடந்த ஜாமியத் உலமா இ இந்த் பொதுக் கூட்டத்தில்,6000 இஸ்லாமிய தலைவர்கள் ஒன்றுகூடி,இது போன்ற தீவிரவாத வெறியாட்டங்களைக் கண்டித்து, அதற்கெதிராக ஃபத்வா இயற்றியது,தீவிரவாதத்திற்கு எதிரான இஸ்லாத்தின் நிலைப்பாட்டை எடுத்துரைக்க ஏதுவாய் அமைந்தது.
ஆனால் ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், சிறுபான்மையினரை வேரறுத்து, அதன் மூலம் சுயலாபம் ஈட்ட எண்ணி,
இதுபோன்ற சம்பவங்களைப் பின்வைத்து தங்கள் காய்களை நகர்த்த ஆயத்தமாகி விடுகின்றனர்.
நெஞ்சுக்கு நேரே வரும் கத்திகளை விட, முதுகுக்கு பின்னே வைக்கப்படும் முட்கள் தான், சிறுபான்மையினரை மட்டுமின்றி, ஜனநாயக சக்திகளையே மிரள வைத்து விடுகின்றன.
எது எப்படி இருப்பினும், இஸ்லாம் மட்டுமல்ல, எந்த ஒரு மதத்திலும் அப்பாவி மக்களைக் கொல்ல அனுமதி இல்லை.ஆனால் தீவிரவாத்தை மதத்தோடு ஒப்பிடுவது, "இஸ்லாமிய தீவிரவாதிகள்" என்று அடைமொழி சூட்டுவது, இந்திய முஸ்லிம்களின் மன நிலையை வெகுவாக பாதித்திருக்கும்.

இஸ்லாம் வேறு பாதை.தீவிரவாதம் வேறு பாதை.
தீவிரவாத்திற்கு எந்த மதமும் கிடையாது.

எறும்பு புற்றுக்கு தீ வைப்பதைக் கூட தடுத்த மார்க்கம் இஸ்லாம்.
போரில் பெண்கள்,குழந்தைகள்,முதியோர்,நிராயுத பாணிகள் இவர்களைத் தாக்கக் கூடாது என்று தடுத்தவர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.அது மட்டுமின்றி,
போர்க்கைதிகளைத் துன்புறுத்தாது பொது மன்னிப்பு வழங்கியதாகவும் ஆதாரங்கள் கூறுகின்றன.
அந்த உன்னத நபியை, தன்னை விஷம் வைத்துக் கொல்ல வந்த யூதப் பெண்மனியை மன்னித்த நபியை,
தலை முதல் கால் வரை இரத்தம் சொட்ட சொட்ட கல்லடி பட்ட போது கூட,அந்த தாயிப்ஃ நகரத்து மக்களை மன்னித்த நபியை, வெடிகுண்டுகளுடன் தொடர்பு படுத்தி கார்ட்டூன் வரையத் தூண்டியது இஸ்லாத்தின் குற்றமா?

பல லட்சம் மக்களை கொன்று குவித்த ஹிட்லருக்கு கூட இந்த அளவுக்கு கேலி கிண்டல்கள் செய்யப் பட்டிருக்குமா ? என்பது சந்தேகமே..

இந்து சமயத்திற்கும் இஸ்லாம் மார்க்கத்திற்கும் உள்ள ஒற்றுமைகள்








கிறிஸ்துவத்திற்கும் இஸ்லாத்திற்குமாவது சம்பந்தம் உண்டு,அது எப்படி இந்து சமயத்திற்கும் இஸ்லாத்திற்கும் சாத்தியம் என்று ஆச்சரியமாய் இருக்கிறதா???ஆனால் இது ஒரு சந்தேகமில்லாத உண்மை....

எந்த ஒரு மதத்தைப் பற்றியும் நாம் அறிய வேண்டுமென்றால்,நாம் அந்த மதத்தின் அடிப்படைக் கொள்கைகளையும்,வேதத்தையும் ஆராய வேண்டும்......அந்த மதத்தை பின்பற்றுவோரை பார்த்து அறிவதை விட இதுவே சால சிறந்ததும் அறிவானதுமாகும்........

இந்துக்கள் பல கடவுள் வழிபாடுடையவர்களாக இருப்பதை நாம் பார்க்கிறோம்......ஆனால்,அடிப்படையான வேதங்கள் ஓரிறைக் கொள்கையை எடுத்துரைப்பவை..........

இந்து மத புனித நூல்களில் உயர் அந்தஸ்துடையதாக கருதப்படுபவை வேதங்கள் ஆகும்........வேதங்கள் நான்கு.அவை ரிக் வேதம்,யசூர் வேதம்,சாம வேதம்,அதர்வண வேதம்.

1.யசூர் வேதம்

* " நா தஸ்ய பிரதிம அஸ்தி "

அவனுக்கு எந்தவொரு தோற்றமும் கிடையாது.
( யசூர் வேதம் 32:3 )

* அவன் உருவமற்றவனும் பரிசுத்தமானவனும் ஆவான்
( யசூர் வேதம் 40:8 )

இதையேதான் திருக்குர்ஆன் (42:11),

" அவனைப் போன்று எப்பொருளும் இல்லை" என்கிறது.


* " அன்தாதம ப்ரவிஸன்தி ஏ அசம்பூதி முபாசதே"

எவர்கள் இயற்கை வஸ்துகளை வணங்குகிறார்களோ அவர்கள் இருளில் பிரவேசிக்கிறார்கள்.இன்னும் எவர்கள் மனிதனால் படைக்கப்பட்ட பொருட்களை வணங்குகிறார்களோ அவர்களும் இருளில் ஆழமாக மூழ்குகிறார்கள். ( யசூர் வேதம் 40:9)


அசம்பூதி - இயற்கை வஸ்துக்கள்; காற்று,நீர் போன்றவை........
சம்பூதி - மனிதனால் படைக்கப்பட்டவை; நாற்காலி,சிலைகள் போன்றவை.......


* "எங்களுக்கு நேர்வழியைக் காட்டி வழிகெடுக்கும் பாவங்களிலிருந்து எங்களை நீக்கி வைப்பாயாக" ( யசூர் வேதம் 40:16)

இது யசூர் வேதம் கூறும் பிரார்த்தனையாகும்..........

"நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!(அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி.(அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல;நெறி தவறியோர் வழியுமல்ல" (திருக்குர்ஆன் 1:5,6,7)


2.அதர்வன வேதம்

* 'தேவ் மஹா ஓசி'

நிச்சயமா கடவுள் மிகப்பெரியவன் ஆவான் ( அதர்வ வேதம் 20:58:3)

இது அதர்வ வேதம் கடவுளைப் புகழும் வரிகள் ஆகும்.......

"அனைத்துப் புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் ( நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்" (திருக்குர்ஆன்1:1)


3.ரிக் வேதம்

* " மா சிதன்யதிவி சன்சதா"
நண்பர்களே!தெய்வீக தன்மை வாய்ந்த அவனையல்லாது வேறு எவரையும் வணங்காதீர்கள்.அவனை மட்டுமே வணங்குங்கள். (ரிக் வேதம் 8:11)

* உண்மையிலேயே தெய்வீக படைப்பாளனின் புகழே பெரியது. (ரிக் வேதம் 5:5:8)

* ஏக இறைவனையே ஞானிகள் பல பெயர்கள் கொண்டு அழைக்கின்றனர்.
( ரிக் வேதம் 1:164:46)

ரிக் வேதம் குறிப்பிடும் இறைவனின் திருப்பெயர்களில் மிக அழகிய திருப்பெயர் 'பிரம்மா' என்பதாகும்.'படைப்பாளன்' என்பது இதன் பொருள்.இதனை அரபியில் மொழி பெய‌ர்ப்போமேயானால் 'கலிக்' என்றாகும்.ஏக இறைவனை 'கலிக்' என்றோ 'படைப்பாளன்' என்றோ 'பிரம்மா' என்றோ அழைப்பதில் முஸ்லிம்களுக்கு எந்த மாற்றுக் க‌ருத்தில்லை........ஆனால் ' பிரம்மாவிற்கு நான்கு தலை உண்டு' என்று கூறுவதையே மறுக்கின்றனர்........ரிக் வேதம் கூறும் மற்றொரு அழகிய திருநாமம் 'விஷ்ணு'.இதன் பொருள் 'பரிபாலிப்பவன்'.இதை அரபியில் மொழிப்பெயர்த்தால் 'ரப்' என்றாகிறது........இறைவனை 'ரப்' என்றோ,'பரிபாலிப்பவன்' என்றோ,'விஷ்ணு' என்றோ கூறுவதில் முஸ்லிம்களுக்கு எந்த மறுப்பும் இல்லை.ஆனால்,'விஷ்ணுவுக்கு நான்கு கைகள் உண்டு.கைகளில் சக்கரமும் சங்குமாக பாம்பில் பள்ளி கொண்டிருப்பவர் ஆவார்' என்பதையே மறுக்கின்றனர்........

இந்த உருவங்களுக்கு அப்பாற்பட்டவனாக இறைவன் இருப்பதினால் முஸ்லிம்கள் அப்பெயரை ஏற்றுக்கொள்வதில்லை........இதனையேதான் யசூர் வேதமும் ( 32:3)

"அவனுக்கு எந்தவொரு உருவமும் கிடையாது" என்கிறது......


4.பிரம்ம சூத்திரம்

"ஏகம் பிரஹம் தவித்ய நாஸ்தே
நஹ்னே நாஸ்தே கின்ஜன்"

இறைவன் ஒருவனே.வேறு இல்லை.இல்லவே இல்லை. என்கிறது......


இவ்வாறாக விருப்புவெறுப்பற்ற நிலையில் இந்து மத கிரந்தங்களைப் படிக்கும் பொழுது அவைகள் ஏக தெய்வக் கொள்கையை கொண்டுள்ளன என அறிந்து கொள்ளலாம்........

Sunday, January 11, 2009

பன்றி இறைச்சி தடை ஏன் ?

பன்றி இறைச்சியை உண்பதால், 70 விதமான, சிறிய மற்றும் பெரிய நோய்கள் உண்டாகின்றன என்பது ஒரு அறிவியல் ரீதியான உண்மை.அதில் முக்கிய‌மான சில வ‌கைககளை ம‌ட்டும் இங்கே பார்ப்போம்.

ம‌னித‌ உட‌லில் ஏற்கென‌வே ப‌ல்வ‌கை புழுஇன‌ங்க‌ள் ப‌ல‌ நாட்க‌ளாக‌ விருந்தாளி போல‌ குடியிருந்து வ‌ருகின்ற‌ன என்று ப‌ள்ளி பாட‌ புத்தக‌ங்களிலேயே நாம் ப‌டித்திருக்கிறோம்.சில‌ புழுக்க‌ள் ந‌ம் உட‌ல் செரிமான‌த்திற்கு ப‌ய‌ன்ப‌டுகின்றன‌ என்ப‌தும் நாம‌றிந்த‌ செய்தியே...
"டேனியா சோலிய‌ம்" Taenia solium (pork tapeworm) என்ற‌வொரு புழு, ப‌ன்றி இறைச்சியை உண்ப‌தால் ந‌ம் உண‌வுக்குழ‌லின் அடிபாகத்தில் வாட‌கையின்றி குடியேறி விடுகிறது.

"Taenia solium (pork tapeworm). The adult lives in the small intestine of man that is the definitive host. Segments of the worm pass through the anus and release large numbers of eggs that can survive for long periods outside of the body. When ingested by pigs, the eggs hatch and each releases an oncosphere that migrates through the intestinal wall and blood vessels to reach striated muscle where encystment occurs. Even when well adequately cooked pig meat is eaten by man, excystment occurs in the small intestine and an adult cestode (worm) develops. If the eggs are released into the upper intestine of man (e.g. through regurgitation) they can invade the host setting up a potentially dangerous larval infection known as cysticercosis in muscle and other sites."

இந்த டேனியா சோலியம் ,அதே பகுதியில் (Ova) தன் முட்டைகளை இடுகிறது. இந்த முட்டைகள் தான் மிகவும் ஆபத்தானவை.இவை மனிதனின் இரத்த நாளங்களில் பயணிப்பதால் அதன் மூலம் எல்லா உறுப்புகளையும் சென்றடைந்து விடுகின்றன.மனித உடல் உறுப்புகளில் எந்த பகுதிக்கு பரவினாலும் அங்கே ஒரு பாதிப்பை ஏற்படுத்தி விடுமாம்.இத‌ய‌ம்,மூளை,க‌ண்,நுரையீர‌ல் என‌ எல்லா இட‌ங்க‌ளிலும் இந்த டேனியா சோலிய‌த்தின் முட்டைக‌ள் கைவ‌ரிசை காட்டுகின்ற‌ன.
டேனியா சோலியம் என்ற புழுவைப் போன்றே இன்னுமொரு புழு உயிரினம் "ட்ரிசுரா ட்ரிசுராஸிஸ்" (Trichura Tichurasis) பன்றி மாமிசத்தின் மூலம் தான் மனித உடலில் பரவுகிறது.டேனியா சோலியமும் இந்த ட்ரிசுராவும் ஒரே மாதிரியான குணமுள்ள உறவினர்கள் தான்.
ஆனால் இந்த புழுக்களின் முட்டைகள், பன்றி இறைச்சியை நன்கு சமைத்தப்பதால் இறந்து விடுகின்றன என்பது எல்லோர் மத்தியிலும் இருக்கும் "பொதுவான தவறான கருத்து".அமெரிக்காவில் நடத்தப் பட்ட ஒரு ஆய்வில், ட்ரிசுராஸிஸ் ஆல் பாதிக்கப் பட்ட 24 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டனர்.இதில் 22 பேர் பன்றி மாமிசத்தை நன்கு சமைத்து உண்டவர்கள் தான்.ஆகவே, இந்த புழுக்களின் முட்டையின் சாதாரண் நீரின் (சமையலின் போது) கொதிநிலையில் இறப்பதில்லை.
இதுமட்டுமின்றி பன்றியின் இறைச்சியில் உள்ள மிதமிஞ்சிய கொழுப்பும், ஹார்ட் அட்டாக்,ஹைபர்டென்ஷன் போன்ற‌ பல ஆபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றன.அமெரிக்கா,ஐரோப்பிய கண்டங்களில் வாழும் பாதி விழுக்காடுபேர் "ஹைபர்டென்ஷன்"ஆல் பாதிக்கப் பட்டுள்ளனர் என்ற செய்தி ஆச்சரியப்படுவதிற்கில்லை.
நோய்களுக்கான காரணியாக மட்டுமின்றி, அது ஒரு சுகாதாரமற்ற விலங்கினமாகவே சுற்றி வருகிறது.பண்டைய காலங்களில், நாகரீக லெட்ரீன்கள் இல்லாத காரணங்களால் மனித கழிவை சுத்தம் செய்வதற்காகவே பன்றிகள் பயன்படுத்தப் பட்டன.
ஆனால் இப்போதெல்லாம் மேலை நாடுக‌ளில் ந‌ல்ல‌ சுகாதாரமான சூழ்நிலைகளில் தானே ப‌ன்றிக‌ள் வ‌ள‌ர்க்க‌ப் ப‌டுகின்றன? என்று நீங்க‌ள் கேட்க‌லாம்.சுகாதார‌மான‌ சூழ்நிலைக‌ளில் வ‌ள‌ர்க்க‌ப் பட்டாலும் எல்லா ப‌ன்றிக‌ளையும் ஒரே இட‌த்தில் வைப்ப‌தால், அவை த‌ம் இன‌த்தின் க‌ழிவுக‌ளையே உண்டு ம‌கிழ்கின்ற‌ன.ஆக‌, இது ஒரு சுகாதார‌ சீர்கேட்டிற்கும் வ‌ழிகோலும் என்ப‌தில் ஐய‌மில்லை.

பல்வேறு நூற்றாண்டுகளுக்கு முன் அருளப் பெற்ற இறை வேதங்களில் பன்றி இறைச்சி தடை செய்யப் பட்டுள்ளதன் நோக்கம் நம்மைக் கொஞ்சம் சிந்திக்க வைக்கிறது.திருக்குர்-ஆனில் நான்கு இடங்களில் இக்கருத்து வலியுறுத்தப் பட்டுள்ளது.இஸ்லாம் மட்டுமின்றி, கிறிஸ்துவர்களின் வேதமாகிய பைபிளிலும் பன்றி இறைச்சியைப் புசிப்பது தடுக்கப் பட்டுள்ளது.

திருக்குர்-ஆன் வசனங்கள் 2:173, 5:3, 6:145 மற்றும் 16:115.
பைபிள் [ Book of Deuteronomy 14:8] Leviticus 11:7-8 ]

****************************************************************
பி.கு: ஒரு சில ஆங்கில வார்த்தைகளுக்கு சரியான தமிழ்ப் பதம் கிடைக்காததால் நான் தொகுத்த தகவல்களை ஆங்கிலத்திலேயே தரவேண்டியதாகிவிட்டது.
****************************************************************