****** WORSHIP THE CREATOR !!!! BUT NOT HIS CREATIONS ******

Friday, January 31, 2020

stories of the constitution



The Constitution of India,which governs the world's largest democracy has just celebrated 71  years...Although the constitution was completed and accepted on November 1949 itself,it came into effect only on January 26 ,1950, as a remembrance of the "purna swaraj " proclamation done by the Indian National Congress against the British three decades back...there are many such interesting facts about our constitution that we have not paid much attention to... 

As the proud citizens of this country it is our duty to know about the story of our constituion,how was it drafted,how it came into effect and what are the key components...It is very essential for us to know this, so as not to be fooled in the very name of our constitution which was created to protect us...it is an irony though....so keep following our blog for further posts

இந்தியா ஒரு வல்லரசின் கதை....



       இந்தியா,நம் தாய் நாடு...பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் நாகரிகத்தின் படிக்கட்டுகளில் மனித சமுதாயம் ஏற முயற்சி செய்துக் கொண்டிருந்த காலக் கட்டத்திலேயே பல்வேறு கலைகளில் சிறந்து விளங்கிய தேசம்...ஆதார பூர்வமான ஹதீஸ்கள் இல்லையென்றாலும் பல அறிஞர்களின் கருத்துப்படி பார்த்தால் ஆதம் (அலை) முதன் முதலில் இறங்கிய இடமாகவும் இருக்க கூடும்..ஆனால் அந்த நிலபரப்பு இப்பொழுது உள்ள இந்தியா அல்ல இலங்கையையும் உள்ளடக்கிய குமரி காண்டம் எனவும் கருத்து உண்டு..அனைத்தையும் படைத்த வல்ல இறைவனே இதனை அதிகம் அறிந்தவன்....எது எப்படியோ அந்த காலம் தொட்டே அனைத்து வளங்களும் நிறைந்த ஒரு நிலபரப்பாகவே இது இருந்துள்ளது...இத்தனை பெருமைக்குறிய நம் தேசத்தின் வரலாறை நாம் தெரிந்து கொள்வது அவசியமானது அல்லவா??!!!வருகிற பதிவுகளில் இந்தியா என்ற வல்லரசின்,பல நாடுகளின் மன்னர்களை ஆசைக் கொண்டு படையெடுக்க வைத்த இந்த அழகிய பூமியின் வரலாறை அறிந்துக்கொள்ள முயல்வோம்.....

Friday, January 24, 2020

குழந்தை வளர்ப்பு 2

நான் எழுதிய குழந்தை வளர்ப்பு முதல் பாகத்திற்க்கும் இந்த இரண்டாம் பாகத்திற்கும் பத்து ஆண்டுகள் இடைவெளி....இந்த பத்து வருஷத்துல எவ்ளோ மாறியிருக்கு இல்ல..அப்போ மொபைல்ல வெறும் கேம் மட்டும் தான் பிள்ளைங்க விளையாடுவாங்க.அதுவே கொஞ்சம் டேஞ்சர் .இப்போ you tube,face book,twitter ன்னு எங்கேயோ போயிட்டிருக்காங்க...இந்த அப்பா அம்மாக்கு இதுல ஒரு பெருமை வேற....ஒன்னு புரிஞ்சுக்கோங்க ,இந்த mobile technology விஷயத்துல நம்மள விட நம்ம பிள்ளைங்களுக்கு நிறைய தெரிஞ்சுதுன்னா அதுல நமக்கு பெருமையவிட ஜாக்கிரதை உணர்வு தான் நிறைய வேனும்...இத நம்ம எப்படி handle பண்றோம்ங்கிறது நம்ம பிள்ளைங்களோட வயச பொறுத்து மாறும்..

1..3 வயசு வரைக்கும் பிள்ளைங்க கிட்ட phone குடுக்கவே குடுக்காதீங்க..இது ரொம்ப ரொம்ப முக்கியம்...எங்க சொன்னா கேட்குறாங்க???அப்படீங்கறீங்களா...அவங்க சொன்னா கேட்க மாட்டாங்க..நம்ம phone கிட்ட கொஞ்சம் distance maintain பண்ணோம்னா (at least அவங்களுக்கு முன்னாடி மட்டுமாவது....)நம்மள அப்படியே copy பண்ணுவாங்க..

2..3 வயசுக்கு மேல அவங்க school போக ஆரம்பிப்பாங்க..அப்போ ரொம்ப control பண்ண முடியாது..ஏன்னா அவங்களுக்கும் friends கிடைப்பாங்க..அவங்க mobile,video,rhymes,games அது இதுன்னு பேசறப்போ நம்ம குழந்தைங்களுக்கு ஒரு curiosity வரும்...அது இயற்கை தான்..அதுக்காக நம்ம அப்படியே விடவும் கூடாது...

3..முடிஞ்ச வரைக்கும் ஒரு குறிப்பிட்ட,குரைந்த மணி நேரத்தை டிவிக்கோ,மொபைலுக்கோ ஒதுக்குங்க...இந்த நேரத்தில் மட்டும் அவர்களை பார்க்க அனுமதியுங்கள்...அவர்களுடன் நீங்களும் சேர்ந்து பாருங்கள்.அவர்கள் என்ன பார்க்க வேண்டும் என்பதை நீங்கள் தேர்வு செய்யுங்கள்..அவர்களை தனியாக பார்க்க அனுமதிக்க வேண்டாம்..(உதாரணத்துக்கு சொல்லனும்னா எங்க வீட்டுல டிவி கிடையாது.so என் பையனுக்கு டிவினா அது மொபைல் தான்..அவங்க பாட்டிக்கூட உட்கார்ந்து நியூஸ் பார்ப்பான் இல்லன்னா அவங்க பார்க்கற பழைய கால தத்துவ பாட்டு..எங்க ரெண்டு பேரோட fixed entertainment time மதியம் 2-30 to 3-30..நாங்க ஏதாவது cartoon movie or kids movie பார்ப்போம் இல்லனா ஏதாவது travel vlog...இது தான் அவனோட டைம்.இதுக்கு மேல கிடையாது. அதுவும் நான் கூட இருந்தால் மட்டும் தான்...அவன் அப்பப்ப என்கிட்டயிருந்து எஸ்கேப்பாகி அவன் பாட்டிக்கூட போய் உட்கார்ந்து cartoon பார்ப்பான்..நானும் வேணும்னே கண்டுக்காத மாதிரி விடுவேன்.ஏன்னா அப்ப அப்ப விட்டு பிடிக்கனும்.அப்போ தான் நம்ம பிடியிலேயே இருப்பாங்க..இல்ல ஒரேயடியா அறுத்துட்டு ஓட பார்ப்பாங்க..ஆனா எப்போ விடனும் எப்போ பிடிக்கனும்னு நமக்கு தெரிஞ்சுருக்கனும்..அது நம்ம சாமர்த்தியம்...)

4..கொஞ்சம் வளர்ந்த குழந்தைங்க,அதாவது 11 வயசுக்கு மேல school assignments,project க்கு computer use பண்ணனும்னா,அவங்களுக்கு desktop வாங்கி குடுங்க..அதுவும் அத எல்லாரும் பார்க்கிற மாதிரி ஹால்ல வைங்க..தனியா  அவங்க ரூம்ல வைக்காதீங்க..

5..உங்க குழந்தைங்க ஆணோ,பெண்ணோ அவங்களுக்கு எதிர் பாலினத்தை மதிக்கவும்,சம்மாக பாவிக்கவும் சிறு வயதிலிருந்தே பழக்குங்கள்..முக்கியமா ஆண் குழந்தைங்களுக்கு..


ஏன் நம்ம இவ்ளோ மெனக்கடனும்னா,இப்போ நம்ம இருக்கற சூழல் அப்படி..நிறைய information நம்ம பிள்ளைங்கள தேடி வந்து அவங்க பிஞ்சு மனச நிறைக்குது..அதுல அதிகமானது அவங்களுக்கு தேவையில்லாதது,வயதுக்கு மீறீயது....நம்மளால முடிஞ்ச வரைக்கும்,அவங்க கொஞ்சம் வளர்ற வரைக்குமாவது இந்த information overload லேர்ந்து அவங்கள பாதுகாக்கனும்..அவங்க கொஞ்சம் வளர்ந்துட்டாங்கன்னா அவங்களுக்கு கொஞ்சம் மனமுதிர்ச்சி வந்துருக்கும்.எது தப்பு எது சரின்னு அவங்களுக்கே புரிய ஆரம்பிக்கும்..அதுவும் சின்ன வயசுலேர்ந்தே நல்ல அன்பான சூழல்ல வளர்ற குழந்தை கெட்டவற்றை விட்டு ஒதுங்கியே தான் இருக்கும்...அந்த சூழல அவர்களுக்குத் தர வேண்டியது நம்ம பொறுப்பு....