****** WORSHIP THE CREATOR !!!! BUT NOT HIS CREATIONS ******
Showing posts with label குர்-ஆன். Show all posts
Showing posts with label குர்-ஆன். Show all posts

Sunday, March 22, 2009

நாம் வெறும் பெயர் தாங்கி முஸ்லிம்களா???ஒரு சுய அலசல்.....part 3


1. " இன்னும் : மனிதர்களில் (ஓர் உறுதியும் இல்லாமல் ) ஓரத்தில் நின்று கொண்டு அல்லாஹ்வை வணங்குகிறவனும் இருக்கிறான்.அவனுக்கு ஒரு நன்மை ஏற்படுமாயின் அதைக் கொண்டு அவன் திருப்தியடைந்து கொள்கிறான்.ஆனால் அவனுக்கு ஒரு சோதனை ஏற்படுமாயின் அவன் ( தன் முகத்தை ) அல்லாஹ்வை விட்டும் திருப்பிக் கொள்கிறான்;இத்தகையவன் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைகிறான்.இதுதான் தெளிவான நஷ்டமாகும்." ( 22 :11 )



சுபஹானல்லாஹ்......இது நம்முடைய வாழ்வு முறையோடு எவ்வளவு பொருந்துகிறது.நம்மை திருத்திக் கொண்டு நஷ்டத்திலிருந்து தவிர்ந்து கொள்வோம்.......


2. " அன்றியும்,அவர்கள் பொய் சாட்சி சொல்ல மாட்டார்கள்; மேலும்,அவர்கள் வீனான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவராக (ஒதுங்கிச்) சென்றுவிடுவார்கள்." ( 25:72 )



சின்ன சின்ன விஷயங்களில்கூட நாம் பொய்க்கு துணைப் போக கூடாது.வீணான காரியம் என்றால் வெட்டிப் பேச்சு, ஊர் வம்பு போன்ற காரியங்களும் தானே..........


3." (பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே ! பூமியில் பெருமையாகவும் நடக்காதே ! அகப்பெருமைக்காரர்,ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்" ( 31 : 18 )


4. " உங்களுக்கு ஷைத்தானிடத்திலிருந்து ஏதேனும் ஊசலாட்டம் ( தீயதைச் செய்ய ) உம்மைத் தூண்டுமாயின், உடனே அல்லாஹ்விடம் காவல் தேடிக் கொள்வீராக ! நிச்சயமாக அவன் ( யாவற்றையும்) செவியேற்பவன் ; நன்கறிபவன்" ( 41 : 36 )



இது நமக்கு அடிக்கடி நடப்பதுதான்.அதாவது கெட்ட எண்ணம் அல்லது தூண்டுதல்.அதற்கான solutionதான் மேற்கூறிய வசணம்............

Sunday, February 1, 2009

நாம் வெறும் பெயர் தாங்கி முஸ்லிம்களா???ஒரு சுய அலசல்.......part 2




"and do not make your hand (as) chained to your neck or extend it completely and (thereby) become blamed and insolent" [17:29]


எவ்வளவு அற்பதமான,அவசியமான வரிகள்........நாம் கைகளைக் கழுத்தோடு கட்டிக் கொள்ளவும் கூடாது,ஒரே அடியாய் விரித்து விடவும் கூடாது.அப்படியென்றால் நாம் இரண்டுக்கும் நடுநிலையாய் சிக்கணமாக இருக்க வேண்டும்........ஆனால்,நம்மில் பலரும் இப்படியா நடந்து கொள்கிறோம்????ஒன்று பணத்தை வாங்கி வாங்கி பீரோவில் பூட்டி வைத்துக் கொண்டு, கேட்கிறவர்களிடமெல்லாம் கையை விரிக்கின்றோம் இல்லையென்றால் தாட் பூட் என்று தேவையில்லாத விஷயங்களுக்கெல்லாம் பணத்தை வாரி இரைத்து நம்மிடமும் பணம் இருக்கிறதென காட்டி கொள்கிறோம்..........



"O you who have believed,let not a people ridicule (another) people;perhaps they may be better than them;nor let women ridicule (other) women; perhaps they may be better than them.And do not insult one another and do not call each other by (offensive) nick names wretched is the name (i.e. mention) of disobeidience after (one's) faith.And whoever does not repent then it is those who are the wrongdoers" [49:11]



நாம் எத்தனை பேரை கேலி பேசியிருக்கிறோம்???எத்தனை கிண்டல்கள்????

நான் சொல்வது மற்றவரை புன்படுத்தும் வகையராக்கள்..........எத்தனை பேரை அவமான படுத்தியிருக்கிறோம்????இவற்றையெல்லாம் இப்பொழுதே விட்டொழித்து பாவ மன்னிப்புக் கோரி விடுவது best இல்லையா????சிந்தியுங்கள்................



"O you who have believed,avoid much (negative) assumption.Indeed,some assumption is sin.And do not spy or backbite each other.would one of you like to eat the flesh of his brother when dead? you would detest it.And fear Allah ; indeed,Allah is accepting of repentence and merciful" [49:12]



இவன் இப்படி தான்,இவ தான் செஞ்சிருப்பா,இது இப்படி தான் நடந்திருக்கும்.......we jump in to conclusions ourselves;but do we analyse our conclusions????நிச்சயமாக அவற்றில் பல உண்மையல்லாத நம் வெற்று ஊகங்கள்தான்........அடுத்த வீட்டுக் காரன் எத்தனை மணிக்கு வந்தால் நமக்கென்ன அல்லது எதிர் வீட்டில் எத்தனை மணிவரை விளக்கெரிந்தால் நமக்கென்ன???ஆனால் அதனை துருவி துருவி ஆராய்ந்து அதனை பற்றி மற்றவரிடம் headlines வாசிக்கும் போது எவ்வளவு சந்தோஷம் நமக்கு............Oh God.,நாம் சர்வ சாதாரனமாக செய்துக் கொண்டிருக்கும் இந்த காரியத்திற்கு இறைவன் கொடுக்கும் உதாரனத்தை யோசித்துப் பாருங்கள்???அருவருப்பாய் இருக்கிறதல்லவா????? இப்படிப் பட்டதை தொடர வேண்டுமா?????


சிந்தியுங்கள்.....................................மீண்டும் சில அடுத்த பதிவில்...................

Saturday, January 24, 2009

நாம் வெறும் பெயர் தாங்கி முஸ்லிம்களா???-ஒரு சுய அலசல்......




நம் பெயர்கள் அரபு பெயர்களாகவும்,நாம் தொப்பி வைத்துக் கொள்வதாலும்,தாடி வைத்துக் கொள்வதாலும் அல்லது பர்தா அணிந்துக் கொள்வதாலும் நாம் முஸ்லிம்களாகி விடுவோமா????அப்படியென்றால் சுவர்க்கம் எளிதாக அடைந்து விடக் கூடிய இடமாகிடுமே........????அப்படியென்றால் நம் முன்னால் சென்ற நபிமார்களும் , நபிதோழர்களும் ஏன் தங்கள் வாழ்வின் சாதாரண நிகழ்வுகளைக் கூட இது சரியா தவறா என கவன‌மாக ஆராய்ந்து செய்தனர்????ஒருவேளை நாம் up to the mark இல்லையோ????அல்லது நாம் வெறும் பெயர் தாங்கி முஸ்லிம்களா????காலம் கடந்து விடுவதற்குள் நாம் இதனை தெளிவுப் படுத்திக் கொள்வோமே............



நமக்கான instruction manual-லான திருக்குர்ஆனில் நம்மை படைத்த இறைவன் நாம் எப்படி இருக்க வேண்டும் என்கிறான்.....நாம் எப்படி இருக்கிறோம் என திறந்த மனதுடன்,உண்மையாக,relax-ஆக நாம் ஒவ்வொருவரும் ஒரு சுய அலசலில் ஈடுபட வேண்டும்........................


"who believe in the unseen,are steadfast in prayer,and spend out of what we have provided for them;" (1:3)


முஸ்லிம்கள் தொழுகையைக் கடைப்பிடிப்பார்கள்,ஜகாதையும் முறையாகக் கொடுப்பார்கள் என இன்னும் பல இடங்களிலும் இறைவன் கூறுகிறான்........ஆனால்,நாம் எப்படி இருக்கிறோம்???

தொழுகையை முறையாக அதற்குறிய நேரத்தில் தொழுகிறோமா அல்லது cricket,serial,shopping,business என்று தள்ளிப் போடுகிறோமா??? ஜகாத் இன்றுவரைக்கும் என்னைப் பொறுத்தவரை என் அப்பா அம்மா department.....என் போன்றோர் முடிந்தவரை தங்கள் pocket moneyஇல் மற்றவர்களுக்கு உதவலாம் அல்லது தன் வசம் உள்ள உடைகள்,பொருட்கள்,அறிவு ஆகியவற்றாலும் உதவலாம்........ஜகாத் கொடுக்க முடிந்தவர்கள் முறையாகக் கணக்கிட்டுக் கொடுக்கிறீர்களா அல்லது குத்துமதிப்பா இரண்டாயிரத்து சொச்சம் என கொடுப்பீர்களா????



"guard strictly your (habit of) prayers,especially the middle prayer;and stand before God in a devout (frame of mind)" [2:238]



நடுத்தொழுகையை அஸர் தொழுகை என எடுத்துக் கொண்டால், நம்மில் பலருக்கு school,college,businessஆல் அதிகம் கட்டாவது லுஹரும் அஸரும் தான்.................


"and your Lord has decreed that you not worship except Him,and to your parents;good treatment.whether one or both of them reach old age (while) with you,say not to them (so much as ) "uff" and do not repel them but speak to them a noble word" [17:23]


நம் அம்மா அப்பாவிடம் நாம் எவ்வாறு நடந்துக் கொள்கிறோம்???வயதானவர்களை துரத்திவிடாமல் அன்புடன் நடத்துகிறோமா???"uff" என்றுக் கூட சொல்லக் கூடாதெனும் போது,நாம் பயங்கரமாக திட்டுகிறோமே அது????



"and tell my servants to say that which is best.........." [17:53]


உரிய அழகான வார்த்தைகளை மட்டும் தான் நாம் பேசுகிறோமா???நாம் பேசுவதில் எத்தனையோ அர்த்தமற்ற தேவையில்லாத வார்த்தைகள் இருக்கின்றனவே????



"and be moderate in your pace and lower your voice;indeed , the most disagreeble of sounds is the voice of the donkeys" [31:19]



எத்தனை அழகாக நம்மை நாசூக்காக நடந்துக் கொள்ள சொல்கிறான் நம்மை படைத்தவன்........




இவற்றையெல்லாம் சிந்தியுங்கள்.........உங்களை நீங்களே அலசுங்கள்.........தவறைத் திருத்திக் கொள்ளுங்கள்.........


மேலும் சில அடுத்த பதிவில்.............